(சின்மயி )
மாயாவி மாயாவி தீயாக வருவான் . மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான்.
தலைத்தொடும் அலையென எழுந்திடுவான் நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்.
மாயாவி மாயாவி தீயாக வருவான் . மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான்.
பயம் மூழும் நேரம் தரை வந்து காப்பான்
துயர்க்கொண்ட பேரை கரைக்கொண்டு சேர்ப்பான்.
கடமை முடிந்தால் பறந்திடுவான் ..........................
பாவி
இவளின் துயரம் மறந்திடுவான் ..............................
அவனோடு இவள் இதயம் தொலையும்
தனிமைத் தெருவில் இவளோடு அவன் நிழலும் அலையும்..
மாயாவி மாயாவி தீயாக வருவான் . மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான்.
தலைத்தொடும் அலையென எழுந்திடுவான் நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்.
எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு,
அழகான நெஞ்சை எவர்க் கண்டதுண்டு?
மனதோ ஓர் உருவம் வரைகிறதே............................
காற்றில் கனவாய் அதுவும் கரைகிறதே...........................
கொடுமை அதில் கொடுமை எதுவோ ???
விழிகள் இருந்தும் உனைக் காணவே முடியாததுவோ?
மாயாவி மாயாவி தீயாக வருவான் . மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான்.
தலைத்தொடும் அலையென எழுந்திடுவான் நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்.