(கார்த்திக்)
ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே......
(கோபிகா பூர்ணிமா)
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி செல்கிறதே.....
(கார்த்திக்)
உயிரே................................... இதயம்.......................
(கோபிகா பூர்ணிமா)
உனக்கே................................ உனக்கே........
(கார்த்திக்)
உன்னைப்போல் ஒரு பெண்ணின் அருகிலே மௌனம்
கொள்வது கஷ்டம் தான்
பேசி கொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்......
(கோபிகா பூர்ணிமா)
சொற்கள் என்பதை மிஞ்சும் அர்த்தமும் மௌனம் என்பதில் உள்ளது உள்ளது
மௌனம் மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது.....
(கார்த்திக்)
சூரியனைப் போலே என் முன்பு வந்தாய்........
பனித்துளி போலே பணிந்து விட்டேன்.....
(கோபிகா பூர்ணிமா)
உயிரே................................... இதயம்.......................
(கார்த்திக்)
உனக்கே................................ உனக்கே........
(கோபிகா பூர்ணிமா)
கனவாய் இருந்தால் இதிலே இருப்போம்...
நிஜமாய் இருந்தால் இன்னும் கேட்போம்
(கார்த்திக்)
கனவாய் இருந்தால் இதிலே இருப்போம்...
நிஜமாய் இருந்தால் இன்னும் கேட்போம்
(கோபிகா பூர்ணிமா)
ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே......
(கார்த்திக்)
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி செல்கிறதே.....
(கார்த்திக்)
உள்ளே போகிற சுவாசம் என்பது வெளியில் வருவது நியாயம் நியாயம்
வெளிவரும் சுவாசம் வாசம் தருவதே மாயம்
(கோபிகா பூர்ணிமா)
கண்கள் காண்கிற கனவு என்பது கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும்
வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம்
(கார்த்திக்)
போதிமரம் போலே உந்தன் கண்கள் பார்க்க
உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேன்...
(கோபிகா பூர்ணிமா)
உயிரே................................... இதயம்.......................
(கார்த்திக்)
உனக்கே................................ உனக்கே........
(கார்த்திக்) (கோபிகா பூர்ணிமா)
ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே......
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி செல்கிறதே.....