யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே
நாம் சென்று வாழ்வோமா வா காதலே.

வாசங்கள் போராடும் காடொன்றிலே
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே.

ஒரு முத்தம் செய்ய ஒரு நாழிகை என்போம்
பல முத்தம் சேர்த்து ஒரு மூலிகை செய்வோம்.

ஒரு முத்தத்தால் எனை தண்டிக்க
மறு முத்தத்தால் எனை மன்னிக்க.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

வாள் மீன்கள் என் வானில் வீழ்கின்றதே
கால் தீண்டி மேகங்கள் போகின்றதே.

வாள் மீது வீடொன்று வேண்டாம் என்றேன்
ஆள் இல்லா கோள் ஒன்றை கேட்கின்றதே..

உன் தேகம் போலே ஒரு விண்கலம் வேண்டும்
உன் மோகம் போலே அதில் மின்கலம் வேண்டும்.

ஒளி வேகத்தில் பறப்போமே வா
புது லோகத்தில் பிறப்போமே வா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

வருடும் ஒரு ராகம் கேட்கின்றேன்
உன் கூந்தல் தந்தாய்.

சிறிதாய் ஒரு ஹைக்கூ கேட்கின்றேன்
சிறித்தே நீ நின்றாய்.

வாழ என் உள்ளங்கையை கேட்டாயோ
தூங்க என் நெஞ்சின் மையம் கேட்டாயோ.

வானமே என் வானமே
மொத்தமாய் நீ வேண்டுமே.

ஆயிரம் மாதங்கள் போதுமே வா.....
குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

Leave a Reply