(விஜய் பிரகாஷ்)
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்.
மருதாணி பூத்த காணி உன்னை தா நீ என்றே கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வியர்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் எனை எங்கே என்று தேடினேன் .....................................
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்.
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா?........

(ஸ்ரேயா ஹோசல்)
நாணி கோணி ராணி எந்தன் மேனி ஏனோ மொய்க்கிறாய்
மருதாணி பூத்த காணி என்னை தா நீ என்றே கேட்கிறாய்
நீ தூரம் நின்றால் வியர்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் எனை எங்கே என்று தேடினேன் .....................................
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேறாய்.
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா?........



(விஜய் பிரகாஷ்)
ஒரு காலை நேரம் நீ வந்தாலே பனி வீசும் காற்றுக்கு பணியாமல் தேகம் சூடேறும்
கண் பேசும் மௌனமே ஒன்றாக நான் போகும் சாலைகள் முடியாமல் எங்கெங்கோ நீளும்
(ஸ்ரேயா ஹோசல்)
நதியிலே இலை போல பயணம், இனிப்பான தருணம், மனதோடு மாய மின்சாரம்
உன் எதிரே நனையாமல் கரைந்தேன் நகராமல் உறைந்தேன் , மெதுவாக மெதுவாக உனதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போல போல துணை...

(விஜய் பிரகாஷ்)
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்.
மருதாணி பூத்த காணி உன்னை தா நீ என்றே கேட்கிறேன்
(ஸ்ரேயா ஹோசல்)
நீ தூரம் நின்றால் வியர்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் எனை எங்கே என்று தேடினேன்
.....................................



(கார்த்திக்)
தொலைதூரம் சென்றதே என் மேகம் புரியாத மென்சோகம் உயிர் மேலே ஊசி இறக்கும்
இம்.. ஓ.. பிரிவாலே இன்று நான் போராட, விழியோரம் நீரோட அவன் கண்ணில் காதல் மயக்கம்
உன் அழகை............. வெளிக்காட்டும் சாரலில் எனைப்போல சாயலில் ஒரு ஜீவன் தீண்டக்கண்டேனே...
நெஞ்சினிலே புரியாத ஆதங்கம் மெலிதான பூகம்பம் இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம்
இதயம் இதயம் சுகமாக ஏற்கும் இனி




(விஜய் பிரகாஷ்)
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்.
மருதாணி பூத்த காணி உன்னை தா நீ என்றே ஏலாக
(ஸ்ரேயா ஹோசல்)
நீ தூரம் நின்றால் வியர்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் எனை எங்கே என்று தேடினேன் ஏலகா....................
(விஜய் பிரகாஷ்)
நீராய் நீராய்
(ஸ்ரேயா ஹோசல்)
நீ மேகம் தாண்டி வாராய்
(விஜய் பிரகாஷ்)
தாராய் தாராய்
(ஸ்ரேயா ஹோசல்)
என் தாகம் தூண்டி நூறாய்
(விஜய் பிரகாஷ்)
பாராய் பாராய்
(ஸ்ரேயா ஹோசல்)
நான் உன்னால் ஆனேன் தீவாய்
(விஜய் பிரகாஷ், ஸ்ரேயா ஹோசல்)
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா.............






இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய........................

Leave a Reply