கடவுளும் காதலும வேறு இல்லை , இதுவரை பார்த்தவர் யாரும் இல்லை
முதல் முறை இரண்டையும் பார்த்தவன் நான்தானே எஎயே
காமமும் காதலும் வேறில்லை , எவருக்கும் இதுவரை  தெரியவில்லை
முதல் முறை இரெண்டையும் புரிந்தவள் நான் தானே , ஏஆஹ்ஹ
தலைகீழ் தெரியுதே வானம் .., தலைமேல் உருளுதே பூமி
கலராய் தெரியுதே காற்று , எல்லாம் காதலே
கடவுளும் காதலும வேறு இல்லை , இதுவரை பார்த்தவர் யாரும் இல்லை
முதல் முறை இரண்டையும் பார்த்தவன் நான்தானே எஎயே

ஆடைகள் அணிந்து அருவியும் நடந்தால் , உனை போல்  இருக்கும் என்று உணர்ந்தேன்
மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால் , உனைப்போல்  இருக்கும் என்றுணர்ந்தேன்
நீ சிந்திய மௌனத்தை சேர்த்து தான் , இசைக்கிறேன் நான்  ஒரு இன்னிசை
நீ  செய்யும் வன்முறை ரசித்து தான் , நான் கூட கற்கிறேன்   தன்னிசை
உன் மென்மையை விரும்புதே என் மனம் போர்க்களம் புகுந்திட வேண்டாம்
உன் வன்மையை விரும்புதே பெண்மை தான் , அஹிம்சையை மாறிட வேண்டாம்
ஓஹ்ஹ்ஹ ஓஹ்ஹோ
மெல்லினம் என்பது பெண்மை , வல்லினம் என்பது  ஆண்மை
இடையினம் என்பது வெண்மை , இது தான் உண்மையே  உண்மையே உண்மையே

முதல் முறை உன்னை நான் பார்த்ததில் இருந்து , இது வரை  எனை நான் பார்த்ததில்லை
உன்னை கண்ட இரவில் கரைந்ததில் இருந்து , இது வரை  இமைகள் மூடவில்லை
உன் இடையிலும் வர்ணங்கள் தெரியுதே , இது என்ன  அதிசயம் சொல்லிடு
இரவெல்லாம் பகலாய் தோன்றுதே , இது என்ன ரகசியம்  சொல்லிடு
நீ புன்னைகை சிந்திடும் நொடிகளில் , நான் சிதறி போகிறேன்  அள்ளிடு
உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில் , பொசுகென்று மலர்கிறேன் கிள்ளிடு
ஓஹ்ஹ்ஹோஹ் ஓஹ்ஹ்ஹ
அழகிய வன்முறை செய் செய் , அதில் கொஞ்சம் பூசைகள்  வை வை
அது தான் காதலின் மெய் மெய் , அதில் இல்லை பொய்யடி
கடவுளும் காதலும வேறு இல்லை , இதுவரை பார்த்தவர் யாரும் இல்லை
முதல் முறை இரண்டையும் பார்த்தவன் நான்தானே எஎயே






இந்தப்பாடலை பதிவிறக்கம் செய்ய................................

Leave a Reply