(சங்கீதா ராஜேஸ்வரன்)

மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை...
மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...



நாணச் செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன்
காதல் கரைபுரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரைக் கோர்த்தேன்
மின்விசிறி கண் விசிறி வெகுதூரம் விழுந்தேன்..........
என்  கனவை நான் மறந்ததை போல கிடந்தேன்..............




மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...

வியர்வைத் துளி முகத்தில் வைரக் கற்கள்
அழகை கூற  வேறு இல்லை சொற்கள்
மீசை முடிக்கரிய அருகம்புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன் அருகில் முற்செடியும் அழகாக தெரியும்
உந்தன் விரல் தீண்டுகையில் துறும்பாகும் மலையும் .............

மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை...
மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...

இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய........

Karaoke version for this song..................


Leave a Reply